கொரோனா 2020: கப்பல்கள் நிறுத்தப்பட்டபோது கடல் விலங்குகளின் வாழ்க்கை எப்படி மாறியது?

Share

கொரோனா 2020, பெருங்கடல், கடல் விலங்குகள், திமிங்கலங்கள், மீன்கள், டால்பின்கள்

பட மூலாதாரம், AIMS/ Gemma Molinaro

2020ஆம் ஆண்டு ‘கொரோனா ஊரடங்கு’ காலங்களில், உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கடல் ஒலி மாசு ஏறக்குறைய முற்றிலும் நின்றது. அதற்குப் பதிலாக மீன்களின் பாடல்கள் கடலில் கலந்தன.

கிராக்கிள்ஸ் (Crackles), ஸ்னாப்ஸ் (Snaps), பாப்ஸ் (pops) மற்றும் கிளிக்ஸ் (clicks) போன்ற ஒலிகள்- இவை நீருக்கடியில் இயங்கும் ஒரு செழிப்பான ஒலிச் சூழலின் அடையாளங்களாகும்.

“இந்தத் தனித்தனி ஒலிகள் அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, அது ஓர் இசைக்குழு போல மாறுகிறது – ஆயிரக்கணக்கான வெவ்வேறு கருவிகள் ஒரே நேரத்தில் இசைப்பதைப் போன்றது,” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் கடல்சார் உயிரியலாளர் ஸ்டீவ் சிம்ப்சன்.

கடலுக்கு அடியில் நமது காதுகளால் கேட்க முடிவதை அடிப்படையாகக் கொண்டு, பல தசாப்தங்களாகப் பெருங்கடல் அமைதியானது தான் என்று பலர் நம்பினர். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கடலின் ஒலிகளைக் கண்காணிக்க ஹைட்ரோஃபோன்கள் (நீருக்கடியில் பயன்படுத்தப்படும் ஒலிவாங்கிகள்) அறிமுகப்படுத்தப்பட்டபோது, கடல்வாழ் உயிரினங்கள் பல்வேறு வகையான ஒலிகளைப் பயன்படுத்துவதை நாம் கண்டறிந்தோம்.

மனிதர்களால் உருவாக்கப்படும் ஒலிகள் நீருக்கடியில் அதிகமாகும்போது, தொடர்பு கொள்ளுதல், இனப்பெருக்கம் மற்றும் உணவளித்தல் போன்ற முக்கியமான விலங்கு நடத்தைகள் பாதிக்கப்படலாம். எனவே, 2010 முதல், கடல்வாழ் உயிரினங்கள் மீது ஒலியின் தாக்கத்தை ஆய்வு செய்யக் கடல்களை எப்படி அமைதிப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் யோசித்து வந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com