குழந்தை பிறப்பை அதிகரிக்க ஆணுறைக்கு வரி விதித்த சீனா – கேலியும் கவலையும் என்ன?

Share

சேமிப்பைப் பாதித்த சொத்துச் சந்தை நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, குடும்பங்களை, குறிப்பாக இளைஞர்களை அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்ற அல்லது குறைந்த நம்பிக்கையுடன் உணர வைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஓஸ்மண்ட் சியா
    • பதவி, வணிக செய்தியாளர்
    • எழுதியவர், யான் சென்
    • பதவி, பிபிசி

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, தனது நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்களுக்கு 13% விற்பனை வரி விதித்துள்ளது. அதே வேளையில், குழந்தைப் பராமரிப்பு சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட வரி சீர்திருத்தத்தின்படி, 1994ஆம் ஆண்டு முதல் (சீனா ‘ஒற்றைக் குழந்தை’ கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்திய காலம்) நடைமுறையில் இருந்த பல வரி விலக்குகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

திருமணம் தொடர்பான சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, பெற்றோர் விடுப்பு காலத்தை நீட்டிப்பது மற்றும் ரொக்க உதவித் தொகைகள் வழங்குவது உள்ளிட்ட பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகை மற்றும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள சீனா, அதிகமான இளைஞர்களை திருமணம் செய்து கொள்ளவும், தம்பதிகளை குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க கடுமையாக முயன்று வருகிறது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுருங்கி வருகிறது, 2024ஆம் ஆண்டில் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகளே பிறந்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com