தொடர்ந்து, “அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடுவை விதிக்க முடியாது. தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.
இருப்பினும், ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் வேண்டுமானால் கொடுக்க முடியும்.
ஒரு நியாயமான காலத்திற்குள் முடிவெடுங்கள் என கேட்டுக்கொள்ள தான் முடியும்” எனவும் கருத்து.