புதின் கோரிக்கை
கிரிமியாவில் சுமார் 20 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 5.5 லட்சம் பேர் ரஷ்ய கூட்டாட்சி செல்வாக்குமிக்க நகரமான செவஸ்தபோலில் உள்ளனர்.
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் புதின் கிரிமியாவில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தினார். அதில் பெரும்பாலானோர் கிரிமியா ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்ததாக கிரிமியாவைக் கட்டுப்படுத்திய ரஷ்ய நிர்வாகம் கூறியது.
இந்த வாக்கெடுப்பை அமெரிக்காவோ, சர்வதேச சபைகளோ ஏற்காது என அறிவித்தார் ஒபாமா. எனினும் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கிரிமியாவை ரஷ்யாவே நிர்வகித்து வருகிறது.
இப்போது கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதி என்பதை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கோரியுள்ளார் புதின்.
“உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவுக்கு வழங்குவது, 2022 முதல் நடத்தப்படும் ஆக்கிரமிப்புக்கு பரிசளிப்பது போன்றது” எனக் கூறி முழுமையாக எதிர்க்கிறார் ஜெலென்ஸ்கி.
தற்போது போர் நிறுத்தத்ததைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது கிரிமியா!