காஸா: உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

Share

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்

செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வழங்கியதோடு, அமெரிக்கா “அதற்கான (காஸா) வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்” எனக் கூறினார்.

பாலத்தீனர்கள் நிரந்தரமாக ஜோர்டான் அல்லது எகிப்துக்கு மாற்றப்பட வேண்டும் என டிரம்ப் முன்னதாகப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இப்படிப் பேசியிருந்தார். இது குறித்துப் பேசிய நேதன்யாகு, “இது கவனிக்கத் தகுந்த விவகாரம்” என்றதோடு, “இதுபோன்ற சிந்தனைகள் மத்தியக் கிழக்கின் வடிவத்தை மாற்றியமைப்பதோடு, அமைதியைக் கொண்டு வரும்” என்றார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்தியக் கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற கேள்விகள் எழுந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து இதற்கான எதிர்வினைகளும் வந்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com