ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “பீகாரில் NDA கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் நாட்டுக்கும் ஊருக்கும் காங்கிரஸ் கட்சி ஆகாது என தெரிவித்தார். இன்றைக்கு இருப்பது காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது. நேரு ஆரம்பித்து உழைத்த காங்கிரஸ் கிடையாது.