கர்நாடகா: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க 80 ரூபாய் – சிறப்பு புலனாய்வுக் குழு கூறுவது என்ன?

Share

வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையம், கர்நாடகா, ராகுல் காந்தி, பாஜக, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கை மாநில அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரித்தது.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக ஒரு பெயருக்கு ரூ.80 கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள் என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின்படி, இந்தத் தொகை ஒரு தரவு மையத்தில் (Data Centre) பணிபுரியும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு அல்லது ஐந்து இளைஞர்களால் பெறப்பட்டது.

சிறப்பு விசாரணைக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் (பெயர் வெளியிட அவர் விரும்பவில்லை) பிபிசியிடம் பேசுகையில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளை அவர்கள் எவ்வாறு அணுகினார்கள் என்பது போன்ற சில அம்சங்களை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம். ‘இலக்கு ஐபி முகவரியை’ பகிர்ந்து கொள்ளுமாறு ஆணையத்திற்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளோம். இது எங்கள் வழக்கை வலுப்படுத்தும்” என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com