கரூரில் போலி பான் கார்டு, கோவையில் வங்கதேசத்தினர் – என்ன நடக்கிறது?

Share

பான் கார்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், போலி பான் கார்டு தயாரிக்கும் கும்பல் சில வாரங்களுக்கு முன்பு பிடிபட்டது.

இதன் தொடர்ச்சியாக, கோவை மாநகர காவல்துறையினர் நடத்திய சோதனையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஆவணங்கள் இன்றியும் போலியான ஆவணங்களைக் கொண்டும் தங்கி வேலை பார்த்ததாக 15 பேர் சிக்கியுள்ளனர்.

போலி பான் கார்டு தயாரித்த கும்பலிடம் போலி ஆவணங்களை வைத்து ஆதார் அட்டை வாங்கியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் சிக்கிய கும்பல்

கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு கரூர் நகரில் சிலர் போலி ஆவணங்களை தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com