கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போதைய நிலவரம் என்ன?

Share

தமிழ்நாடு, கனமழை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காவிரி டெல்டா மாவட்டங்கள்
படக்குறிப்பு, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சேதம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

புதுச்சேரியில் படகுகள் சேதம்

புதுச்சேரியில் அதிகபட்சமாக பெரிய காலாப்பட்டு பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் சின்ன காலப்பட்டு மீனவ கிராமத்தில் நேற்று மேட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் கடல் நோக்கி வந்தது.

இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுடன் மீன்படி வலைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீனவர்கள் போராடி படகுகளை மீட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட படகு கடலுக்குள் சென்றுள்ளன. 50-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி உள்ளதாக மீனவர் தெரிவிக்கின்றனர். இதே போல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலூரில் நெற்பயிர்கள் சேதம், இருவர் உயிரிழப்பு

அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்த கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடியில் தொடர் மழை காரணமாக 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com