கத்தார் சிறையில் இந்திய மென்பொருள் நிறுவன அதிகாரி – காரணம் என்ன?

Share

கத்தார்

பட மூலாதாரம், JP GUPTA

ஒவ்வொரு வாரமும், தனது மகன் தொலைபேசியில் அழுவதை கேட்கும் போது ஜேபி குப்தாவின் மனம் உடைந்துபோகிறது.

இந்த வாராந்திர தொலைபேசி அழைப்பு நிகழ்வு ஜனவரியில், கத்தாரில் இருக்கும் இந்திய மூத்த தொழில்நுட்ப அதிகாரியான அமித் குப்தா இதுவரை வெளியிடப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் தொடங்கியது.

அதன் பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்னவென்பது தங்களுக்கு தெரியாது என இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

“அவர் எங்களுடன் ஐந்து நிமிடங்கள்( ஒரு வாரத்தில்) மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார். அப்போது அவர் சொல்வதெல்லாம்: அப்பா நான் தவறாக எதும் செய்யவில்லை என்பது மட்டும்தான். அதன் பின்னர் அவர் உடைந்துபோய் அழுகிறார்” என்கிறார் அவரது தந்தை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com