ஓ. பன்னீர்செல்வம் எந்த பக்கம் சாய்வார்? விஜய் உடனா அல்லது திமுகவா?

Share

ஓ. பன்னீர்செல்வம்
படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், திடீரென ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.

அவர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும்போது, அவரை வரவேற்கவும் வழியனுப்பவும் வாய்ப்பளிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார்.

இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். “எனது தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தாத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனிமரியாதையாகவும் எனக்களிக்கப்பட்ட சிறப்புரிமையாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com