மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணம் ஏற்றப்பட்டது. அந்த ஏழு மாதத்தில் மின்சார வாரியத்தின் வருமானம் சுமார் ரூ.60,000 கோடி. அப்போதும் மின்சார வாரியத்தின் கடன் என்று ரூ.26,500 கோடி என்று கூறப்பட்டது. அந்த ஏழு மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.6.89 ஆக இருந்தது.
2024-ம் ஆண்டு நிதியாண்டில், மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு சராசரியாக ரூ.7.68 உயர்த்தப்பட்டது. ஆனால், அப்போது கூறப்பட்ட நஷ்டம் ரூ.24 ஆயிரம் கோடி.
ஆக, மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தி கொண்டு வந்தப்போது கூட, மின்சார வாரியத்தின் கடன் குறையவில்லை.
இன்னொரு பக்கம், ஒவ்வொரு ஆண்டும், மின்சார வாரியம் கிட்டத்தட்ட 500 கோடி யூனிட்டுகளை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இருந்தும், மின்சார வாரியத்தின் நஷ்டம் குறையவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளார் அமைப்பு சார்பாக தொடர்ந்து மின்சார வாரியத்திடம் புள்ளிவிவரத்தோடு கேள்வி எழுப்பி வருகிறோம். ஆனால், இப்போது வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
மின்சார வாரியத்திற்கு மின் விற்பனை மட்டும் தான் தொழில் அல்ல. மின்சார வாரியத்திடம் இருக்கும் மின் கட்டமைப்புகளை தனியார் பயன்படுத்துவதை அனுமதிப்பது மூலமும் மின்சார வாரியம் சிறிதளவு சம்பாதிக்கிறது.
ஆனால், அந்தக் கட்டமைப்பில் தனியார் மின்சாரம் வருவதும், அதை கணக்கிடுவதிலும் தான் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. ஒரே கம்பியில் 15,000-க்கும் மேற்பட்ட தனியார் மின்சாரம் பாய்கிறது என்பது அதிர்ச்சி தகவல். இந்த முறைகேடு தான் மின்சார வாரியத்தின் நஷ்டம் குறையாமல் இருப்பதற்கு அடிப்படை காரணம். உயர்த்தப்படும் மின் கட்டணம் அனைத்தும், தனியார்கள் இந்தக் கட்டமைப்பை பயன்படுத்துவதன் மூலம் கொள்ளையடித்து வருகிறது.
தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கினால் கமிஷன் கிடைக்கும். இதனால் தான் மின்சார வாரியம், தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட ரூ.20,000 கோடி ஊழல் நடக்கும் ஒரே துறை மின்சாரத் துறை தான். இதற்கு மேலே சொன்ன புள்ளிவிவரங்களே சாட்சி.
2022-ம் ஆண்டு நிதியாண்டில், மின் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்ட ஏழு மாதங்களுக்கு மட்டும் மின்சார வாரியத்தின் வருமானம் கிட்டதட்ட ரூ.60,000 கோடி என்றால் பார்த்துகொள்ளுங்கள்!” என்கிறார்.