
விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அவரை ஏற்று கொண்டவர்களால் மிகப்பெரிய அணி உருவாகியுள்ளது. அ.தி.மு.க-வில் யார் யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்கக் கூடாது, யார் ஒற்றைக் கருத்து உடையவர்கள், யாரால் இயக்கத்திற்கு லாபம் என்பதை கணக்கு போட்டு சேர்க்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அ.தி.மு.க – பாஜக கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி சொல்வது தான் வேத வாக்கு, வேறு யாரு கருத்து சொன்னாலும் அது பொருட்படுத்தப்பட மாட்டாது.