‘என் முகத்தைப் பார்த்து நான் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், என் தோளில் கை வைத்து சில விஷயங்களைப் பேசுவார்’- Rohit Sharma குறித்து rahul chahar

Share

இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.

“Filmygyan’ என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், “ஒவ்வொரு அணிக்கும் அதன் நேரம் வரும், புதிய கேப்டன்கள் வருவார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இது அவர்களின் முடிவு.

ஆனால் அணிக்காக என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு வீரராக, ரோஹித் மிகவும் அமைதியானவர்.”

ராகுல் சாஹர்

ராகுல் சாஹர்

ஒரு கேப்டன் ஒரு வீரரை நம்புவது மிகவும் முக்கியம். எனக்கு நினைவில் இருக்கிறது, அவர் என் முகத்தைப் பார்த்து, நான் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், என் தோளில் கை வைத்து சில விஷயங்களைப் பேசுவார்.

“நிம்மதியாக இரு” என்று சொல்வார். ஒரு தலைவராக, அவர் எல்லோரையும் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர். பும்ராவுக்கு என்னிடம் கூறிய அதே விஷயத்தை அவர் சொல்ல மாட்டார்; அவருக்கு ஏதாவது அறிவார்ந்த விஷயத்தை சொல்வார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com