அரசு உதவிகள் குறித்து விஸ்வநாதன் ஆனந்த்
தொடர்ந்து அவரிடம் செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கும், செஸ் வீரர்களுக்கும் உலகளவில் கிடைத்திற்கும் அங்கீகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று நாம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த விஸ்வநாதன் ஆனந்த், “ நான் விளையாடிய தருணத்திலும் எனக்கு பட்டங்கள், அங்கீகாரம் எல்லாம் கிடைத்தது. பத்திரிகைகளில் எல்லாம் செஸ் பற்றிய செய்திகள் வந்தன.
அதுவே எனக்கு சந்தோஷமாக இருந்தது. இப்போது செஸ் பற்றி இன்னும் அதிகமாக படிக்கிறார்கள், கேள்விப்படுகிறார்கள். அதனால் செஸ் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு செஸ் வீரராக இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.

இதனைத்தொடர்ந்து பட்டம் வெல்லும் செஸ் வீரர்களுக்கு அரசு வேலை தவிர வேறு எந்த மாதிரியான உதவிகளை மாநில அரசுகள் செய்துக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பினோம்.
“வீரர்களின் கவலைகளை குறைக்கும் வகையிலான உதவிகளை அரசு செய்ய வேண்டும். செஸ் வீரர்கள் அந்த ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடுவதற்கான சூழலை உருவாக்கி தரும் வகையில் உதவிகளை செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார்.