என்டிடிவி: பிரனாய் ராய், ராதிகா ராய் ராஜிநாமா – அதானி இனி என்ன செய்வார்?

Share

பிரனாய் ராய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரனாய் ராய்

  • பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.
  • மேம்பாட்டுக் குழுவின் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புக்லியா, செந்தில் செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
  • இந்த மாற்றங்கள் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் என்ற மேம்பாட்டுக் குழுவில் நடந்துள்ளன. பிரனாய் ராய் தற்போது என்டிடிவி நிர்வாக இணைத் தலைவராக உள்ளார்.
  • அதானி குழுமம் என்டிடிவியை கையகப்படுத்தத் தயாராகி வருகிறது. என்டிடிவியில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்கான திறந்த சலுகையை அதானி குழுமம் வழங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் நிறுவனர்களான பிரனாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் அந்த நிறுவனத்தின் வாரிய இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இது அந்த ஊடக நிறுவனத்தைக் கையகப்படுத்தும் அதானியின் முயற்சிக்குச் சாதகமாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் செய்தித் தொலைக்காட்சிகளின் எதிர்காலம் எப்படியுள்ளது என்பதை பிபிசி அறிந்து கொள்ள முயன்றது.

ராதிகா ராய் தனது கணவரும் ஒளிபரப்பாளருமான பிரனாய் ராயுடன் இணைந்து என்டிடிவி-ஐ நிறுவியதை ஒரு “மகிழ்ச்சிகரமான விபத்து” என்று விவரித்தார்.

1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு நடத்தும் தூர்தர்ஷனில் தி வேர்ல்ட் திஸ் வீக் என்ற ஒற்றை நிகழ்ச்சியுடன் என்டிடிவியை ராய் தம்பதி அறிமுகத்தினர். அதற்கென எந்தவித பெரிய திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com