தேவையான அளவு ஆபரணம் உண்டு. ஆனால், எதிர்காலத்தில் தங்க ஆபரணம் வேண்டும் என்பவர்கள், இப்போதே ஆபரணத் தங்கத்தை வாங்கிவிட வேண்டாம்.
இப்போது இருக்கும் மாடல், எதிர்காலத்தில் பழைய மாடல் ஆகியிருக்கும். அதை விற்று, வேறு ஆபரணத்தை வாங்கினாலும் அவ்வளவு லாபகரமானதாக இருக்காது.
அதனால், எதிர்காலத் தங்கத் தேவைக்கு முதலீடுதான் சிறந்தது. நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்து வருகிறீர்களோ, அது தங்கம் விலை உயர்விற்கு ஏற்ப அப்படியே உயர்ந்துவிடும். சேதாரம், செய்கூலி என எதுவும் இருக்காது. நமக்கு லாபம்தான்.

1. கோல்டு இ.டி.எஃப்: தங்கம் வாங்குவதற்காக நீங்கள் வைத்திருக்கும் பணத்தை கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கான தங்கம் உங்களது கணக்கில் யூனிட்டுகளாக சேர்ந்துவிடும்.
இதற்கு டீமேட் கணக்கு அவசியம். இதை தொடங்குவது எளிது தான்.
இதில் தினம் தினம் கூட நீங்கள் முதலீடு செய்யலாம். செலவு, சேமிப்பு போக மிச்சம் இருக்கும் பணம் ரூ.100 ஆக இருந்தால் கூட, இதில் முதலீடு செய்யலாம். அந்தத் தொகைக்கான யூனிட்டுகள் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.
இதனால், பல்க்கான தொகையைச் சேர்த்து தான் தங்கம் வாங்க வேண்டும் என்கிற எதிர்கால டென்ஷனை இந்த முதலீடு உங்களுக்கு குறைக்கும்.
மேலும், தங்க முதலீட்டிலேயே இது தான் பெஸ்ட் ஆப்ஷன்.