சித்த மருத்துவத்திலும் அதற்கு நிறைய தீர்வுகள் உள்ளன. உதாரணத்துக்கு, திரிபலா சூரணம். ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும், கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கவும் திரிபலா பயன்தரும்.
அதேபோல நத்தைச்சூரி சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதயத்தின் செயல்பாடுகளைச் சிறப்பாக்கும் மருதம்பட்டைச் சூரணம், வெண் தாமரை சூரணம் போன்ற மருந்துகளையும், சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம்.

புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க்காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக, மதிய உணவுக்கு புரோபயாடிக் சத்து நிறைந்த பானகம், பழைய சாத நீர், மோர் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம்.
செரிமான மண்டலத்துக்கு நலம் செய்யக்கூடிய கிருமிகளை அதிகரித்தாலே உடல் பருமன் வராமல் தடுக்கலாம் என்ற கருத்தும் சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது.