பின்னர் பேசிய செஃப் தீனா, “நாம் சமைக்கின்ற உணவை எப்போதும் வேஸ்ட் செய்யக்கூடாது” என கோரிக்கை வைத்தார். இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
தாங்கள் சமைத்து எடுத்து வந்திருந்த உணவைத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள். செஃப் தீனா, ஒவ்வொருவராக சென்று அந்த உணவை டேஸ்ட் செய்தார். கவிதா என்பவர் மட்டும் 21 வகையான உணவுகளுடன் போட்டியில் பங்கேற்று ஆச்சர்யப்படுத்தினார். சிறு குறிஞ்சி சூப், இனிப்பு வடை, மோர்க் களி, சிங்கி இறால் புட்டு, சுரைக்காய் நண்டு பிரட்டல் என வகை வகையான, சுவையான உணவுகளுடன் உற்ச்சாகமாக பெண்கள் போட்டியில் பங்கெடுத்ததால் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி களைக்கட்டியது.