ஈரோடு த.வெ.க. பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடு எப்படி உள்ளது?

Share

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்

ஈரோடு பெருந்துறையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என்று கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.

மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்பு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் தவெக பொதுக்கூட்டம் என்பதால், கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொதுக் கூட்டத்திற்கு 84 நிபந்தனைகள்!

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்குப் பின்பு, தமிழகத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்கவில்லை. உள்ளரங்கங்களில் நடந்த கட்சி நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றார்.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியன்று புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் பேசினார். ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com