இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான மாஅதிபர் அதிபரை

Share

இலங்கை

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, தேசபந்து தென்னக்கோன்

இலங்கையில் முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், அவர் தலைமறைவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசபந்து தென்னக்கோன் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

கொலை வழக்கொன்று தொடர்பான விசாரணைகளை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை, கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது ஓகந்தர மற்றும் கிரிவுல்ல ஆகிய வீடுகளுக்கு சென்ற போதிலும், அவரது வீட்டின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com