இரான் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமா? உச்ச தலைவர் காமனெயி கூறியது என்ன?

Share

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி

  • எழுதியவர், ஈடோ வோக்
  • பதவி, பிபிசி செய்திகள்

இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். ‘உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்’ என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்தத் தாக்குதலுக்கு இரான் ‘தக்க பதிலடி கொடுக்கும்’ என்று கூறினார். ஆனால் ‘இரான் போரை விரும்பவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் குறைந்தது நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இரான் ஒப்புக் கொண்டுள்ளது.

இரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை (அக்டோபர் 26) இரானின் பல இடங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்ததாக இஸ்ரேல் தரப்பு கூறியது. அக்டோபர் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), இரானிய வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தயாரிப்பு அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகக் கூறினார். இந்தத் தாக்குதல் “இரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை கட்டமைக்கும் அமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com