நேற்று நடைபெற்ற (பிப்ரவரி 26) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. சமீபமாக ஆப்கானிஸ்தான் தங்களுடைய திறமையால் ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை சச்சின் பாராட்டி இருக்கிறார்.

“சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக தொடர்ச்சியாக எழுச்சி கண்டு வருவது உத்வேகத்தைக் கொடுக்கிறது. இனிமேலும் அவர்கள் பெறும் வெற்றிகளை அப்செட் என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்கள் அப்படி வெற்றி பெறுவதை வழக்கமாக்கிவிட்டார்கள்.