இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தடைபட்டது ஏன்? இரு நாடுகளின் வாதம் என்ன?

Share

அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோவர்ட் லுட்னிக்

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்திருக்கிறது.

இதற்கிடையில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசவில்லை என்பதால்தான் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசாததால் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நடைபெறவில்லை என்ற ஹோவர்ட் லுட்னிக்கின் கூற்றை இந்தியா ‘தவறானது’ என்று வெள்ளிக்கிழமையன்று நிராகரித்தது.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுமதித்துள்ள நிலையிலும், லுட்னிக் இந்தக் கூற்றை முன்வைத்தார்.

” இந்திய அரசுக்கு (ஒப்பந்தத்தில்) உடன்பாடு இல்லை, அதனால் மோதி அழைக்கவில்லை” என்று லுட்னிக் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com