இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நினைத்து பெரும் இழப்பை சந்திக்கப்போகிறதா வங்கதேசம்?

Share

வங்கதேசம், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து தரை வழியாக நூல் இறக்குமதிக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து உலகம் முழுவதும் வர்த்தகப் போர் வெடித்துள்ளது. இது இந்தியாவையும் நேரடியாகப் பாதிக்கிறது.

ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே வேறு வகையான வர்த்தகப் போர் நடந்து வருகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆறாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கும் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் எனத் தோன்றியது.

ஆனால், அந்த சந்திப்பிற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் 2020 முதல் நடைமுறையில் உள்ள வங்கதேசப் பொருட்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்யும் வசதியினை (transshipment facility) திரும்பப் பெற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com