ஆப்பிரிக்காவின் ஜாம்பியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் காணப்படும் “இச்சிகோலோவா’ என்ற பிரமாண்ட காளான், உலகின் மிகப்பெரிய உண்ணக்கூடிய காளான் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.
வெறும் உணவுப் பொருளாக மட்டுமின்றி, இது ஒரு சூழலியல் அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த காளான், கரையான் புற்றுகளுடன் இணைந்து வளரும் ஒரு விசித்திரமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது.