இண்டிகோ விமான நெருக்கடிக்கு யார் காரணம்? – முழு அலசல்

Share

இண்டிகோ நெருக்கடி, இந்தியா, விமானங்கள், விமான நிறுவனங்கள், விபத்து

பட மூலாதாரம், Getty Images

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் 158 பேர் இறந்தனர்.

விபத்து விசாரணை அறிக்கையில், விமானி தூங்கியதுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

13 ஆண்டு நீதிமன்ற வழக்குக்குப் பிறகு, விமானிகள் சோர்வை தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள் செயல்படுத்தப்படும் தருவாயில் உள்ளன.

ஆனால் தற்போது ஒரு விமான நிறுவனத்திற்கு மட்டும் பிப்ரவரி 10, 2026 வரை இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தோன்றினாலும், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் விமானங்கள் மற்றும் அவற்றில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com