”ஆசிர்வதிக்கப்பட்ட பெற்றோராக..” பெண் குழந்தை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட ஆலியா!

Share

பாலிவுட்டின் சூப்பர் ஜோடியான ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடலில் காலை 7 மணிக்கு ஆலியா அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12.5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிக்கு சோஷியல் மீடியாவில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார் ஆலியா பட். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர்,

எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது குழந்தை கைகளில். அழகான பெண் குழந்தை அவள். ஆசிர்வதிக்கப்பட்ட அன்பான பெற்றோராக மாறி இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் – ஆலியா இருவரும் ஏப்ரல் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் திடீரென்று திருமண செய்தியை அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். தங்களுக்கு மிகவும் பிடித்தமான வீட்டின் பால்கனியில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. ஜீன் மாதம் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம் என கூறி அடுத்த இன்ப அதிர்ச்சியை தந்தனர். இந்நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com