நிம்ஹான்ஸின் ரெசிடென்ட் மெடிக்கல் ஆஃபீசர் டாக்டர் ஷஷிதர், சோதனைகளை நடத்துவதற்கு 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
“குழந்தை மிகவும் மோசமாக இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைக்க நாங்கள் முயன்றதால் தாமதம் ஏற்பட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.
“குழந்தையை நிம்ஹான்ஸுக்கு அழைத்து வந்தோம், ஏனென்றால் நாங்கள் அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டோம். குழந்தையை இங்கு கொண்டு வந்தவுடன் டாக்டர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.
ஆனால் டாக்டர்கள் ஆம்புலன்ஸ் வரை மட்டுமே வந்து குழந்தையைப் பார்த்து விட்டுச் சென்றனர். அவர்கள் எங்களிடம் கூட பேசவில்லை. அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசிக்கொண்டு நோயாளி ஆம்புலன்சில் படுத்திருக்கும்போது உள்ளே சென்றார்கள்” என்று ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், “நிம்ஹான்ஸில் ஏற்பாடுகள் சரியாக இல்லை. அங்கு கூட்டம் அதிகமாக உள்ளது. அழுத்தம் அதிகம் இருந்தபோதிலும் தரமான சிகிச்சையை ஊழியர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்களின் அழுத்தத்தை நாம் குறைக்க வேண்டும். குழந்தையின் மரணம் குறித்த கூடுதல் தகவல்களை நான் சேகரிப்பேன்” என்று கூறினார்.