அமெரிக்கா: ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த சட்டவிரோத குடியேறிகள் – நிலவரம் என்ன?

Share

குடியேறிகள், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் சி17 எனும் ராணுவ விமானம் மூலம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்தனர்.

பிபிசிக்கு செய்திகளை வழங்கிவரும் ரவீந்தர் சிங் ராபின் கூறுகையில், இதையொட்டி விமான நிலையத்தின் உள்ளே ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், எனினும் விமான நிலையத்தின் வெளியே இந்தியா வந்தடைந்தவர்களிடம் பேச முடியும் என்றும் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாடு கடத்தப்படும் 205 இந்தியர்கள்

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், இவ்வாறு இந்திய சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com