‘அமெரிக்காவை நம்ப வேண்டாம்’ – கத்தாரை இஸ்ரேல் தாக்கியது பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

Share

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பங்கு இருப்பதாக அரபு ஊடகங்கள் கூறுவது ஏன்?

பட மூலாதாரம், Reuters

செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல், உயர்நிலை ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

செளதி அல் அரேபியா டிவியின் செய்தித் தொகுப்பில், இஸ்ரேல் ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி, தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும், அதிபர் டிரம்ப் அதற்கு “பச்சைக்கொடி காட்டினார்” என்றும் ஒரு அதிகாரி கூறியதைத் தெரிவித்தது.

மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஹமாஸ் தலைவர் ஒருவரின் கூற்றைச் சுட்டிக்காட்டிய அந்த தொலைக்காட்சி, தாக்குதல் தோல்வியடைந்தது, பேச்சுவார்த்தை குழுவினர் உயிர் பிழைத்தனர் என்றும் தெரிவித்தது.

“தோல்வியடைந்த தாக்குதல்” என்று அல் அரேபியா சேனல் விவரித்ததைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பு ஆய்வாளர் ரியாட் கஹ்வாஜியை அழைத்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com