தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
‘கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையையும் அதிமுக முன்வைக்கவில்லை’ எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
‘ஒளிமயமான எதிர்காலத்தை அதிமுக – பாஜக கூட்டணி உருவாக்கும்’ என தனது எக்ஸ் பக்கத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி நிலையில், இந்த கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் எதிர்காலம் என்ன? என்பன உள்ளிட்ட 6 கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்.
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி?
அதிமுக-பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. டெல்லியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமித் ஷா, ‘தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்’ எனப் பதிவிட்டார். ஆனால், கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி ஆகியோரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக சென்னையில் அமித் ஷா அறிவித்துள்ளார். “வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கப் போகிறது” எனவும் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோதி தனது எக்ஸ் பக்கத்தில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம்; எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்’ எனப் பதிவிட்டுள்ளார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
“திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்” எனவும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ‘திமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விடுவித்து ஒளிமயமான எதிர்காலத்தை அதிமுக – பாஜக கூட்டணி உருவாக்கும். திமுக செய்த தவறுகளை சரிசெய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்’ எனக் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
“அதிமுகவின் இந்த முடிவு சட்டமன்றத் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தும்” எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” பள்ளிக்கல்வி நிதியை பாஜக அரசு தர மறுப்பது, நீட் தேர்வுக்கு எதிராக இருப்பது ஆகியவற்றைத் தான் தமிழ்நாட்டு மக்கள் கவனிப்பார்கள். அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாகவே பார்க்கப்படும். அதுவே திமுக, அதிமுக இடையில் மட்டும் போட்டி என்றால் மக்கள் மாற்றி ஓட்டுப் போடுவார்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா, ” ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டுமா என்பது தான் தேர்தலில் பிரதானமாக பேசப்படும். ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை அதிகரித்துள்ளது. கூட்டணியை பெரிதாக பார்ப்பதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார்,
தொடர்ந்து பேசிய அவர், “திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இருந்தாலும் தங்கள் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளனர். அதுபோல தான் நாங்களும்” எனவும் குறிப்பிட்டார்.
அண்ணாமலை மாற்றத்திற்கு அதிமுக காரணமா?
தமிழக பாஜக மாநில தலைவர் மாற்றம் தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா பதிவிட்ட பிறகே செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே தலைவர் பதவியில் மாற்றம் நடந்ததா? என்ற கேள்வி எழுந்தது.
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் மறைந்த அதிமுக தலைவர்களை அவர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
‘டிஎம்கே ஃபைல்ஸ்’ (DMK FILES) என்ற பெயரில் தி.மு.க தொடர்பான முறைகேடுகளை வெளியிட்ட அண்ணாமலை, ‘அதிமுக அரசின் ஊழல்களையும் வெளியிடுவேன்’ எனக் கூறினார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று விமர்சித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்தக் கூட்டணி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக தனி அணியாக போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஓரிடத்தில் கூட அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. ஆனால், கோவை, கன்னியாகுமரி உள்பட ஒன்பது தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
இந்தநிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுகள் உருவெடுக்கவே, மாநில தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.
அதற்கேற்ப, புதிய மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை கடந்த வியாழக்கிழமை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்தார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அழுத்தம் காரணமாகவே மாநில தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டதாக பார்க்கப்பட்டது.
இதற்கு செய்தியாளர் சந்திப்பின் போது இதற்குப் பதில் அளித்த அமித் ஷா, “இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மாநில தலைவராக என் பக்கத்தில் தான் அண்ணாமலை அமர்ந்திருக்கிறார்” எனக் கூறினார்.
“இன்றைய தேதியில் அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக இருக்கிறார். அவர் பதவியில் இருக்கும் போதே அ.தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி சேர்ந்தது என்று தான் பார்க்கப்படும். அதனால் தனது அழுத்தம் மூலமாக எடப்பாடி பழனிசாமி சாதித்துவிட்டார் எனக் கூற முடியாது” என பிபிசி தமிழிடம் கூறினார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.
“மக்களவைத் தேர்தலில் தனி அணியாக போட்டியிட்டாலும் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்” என்கிறார் பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க வேண்டும் என்பது பாஜக தலைமையின் திட்டமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலையின் நிலை என்ன?
தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ள நிலையில், அண்ணாமலையின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த அமித் ஷா, ‘தமிழ்நாடு பாஜக தலைவராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அண்ணாமலை செலுத்தியுள்ளார். மோதியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் கட்சியின் திட்டங்களை கிராமம் தோறும் கொண்டு செல்வதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது’ எனக் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 3
கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையின் அமைப்பு ரீதியான திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
“அமித் ஷா இவ்வாறு கூறினாலும் தமிழக தேர்தல் களம் தொடர்பாக அண்ணாமலை முன்வைத்த திட்டங்களை பாஜக தேசிய தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை என்றே பார்க்க முடிகிறது” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.
‘அதிமுக ஓர் ஊழல் கட்சி’, ‘அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம்’, ‘நான் என்ன மேலாளரா?’ என்றெல்லாம் அண்ணாமலை பேசி வந்ததாகக் கூறும் ஜென்ராம். “தனது சென்னை வருகையின் மூலம் எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலையையும் ஒருசேர வீழ்த்திவிட்டு வெற்றிக் கொடியைக் காட்டிவிட்டு அமித் ஷா சென்றுவிட்டார்” எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், அமித் ஷா குறிப்பிட்டதைப் போல தேசிய அரசியலில் அண்ணாமலையை பாஜக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார், பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.
அதிமுக-பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்?
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவுக்கு 66 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
‘தேர்தல் தோல்விக்கு பாஜக உடன் கூட்டணி சேர்ந்ததே காரணம்’ என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிரதான காரணமாக பேசி வந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ராயபுரத்தில் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறேன். பாஜக உடன் சேர்ந்ததால் தொகுதியில் உள்ள நாற்பதாயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் விழவில்லை” எனப் பேசினார்.
மக்களும் இந்தக் கூட்டணியை விரும்பவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியதாகவும் அவர் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடந்த முதல் இடைத்தேர்தலில் இதே கருத்தை முன்வைத்து பாஜகவை விமர்சித்தார்.
“தேர்தலில் தோல்வியடைந்ததால் அவ்வாறு அவர்கள் பேசினார். ஆனால் கொள்கை ரீதியாக சிறுபான்மை மக்களை வதைக்கும் சட்டங்களை பாஜக கொண்டு வரும்போது எதிர்க்கிறோம். திமுகவும் அதையே செய்கிறது” எனக் கூறுகிறார் அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” இது அரசியல் ரீதியான கூட்டணி. பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் போதே முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினேன். வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தோம். கொள்கை ரீதியாக நாங்கள் சரியாக செயல்படுகிறோம்” எனக் கூறினார்.
பட மூலாதாரம், ANI
“ஆனால், இது அமித் ஷாவின் நகர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் அய்யாநாதன். “அதிமுகவுக்குள் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால், அமித் ஷா கொடுத்த அழுத்தத்தால் கூட்டணி ஆட்சிக்கே எடப்பாடி பழனிசாமி சம்மதித்துள்ளார்” என்கிறார்.
“இந்தக் கூட்டணியால் பாஜகவுக்கு முழு நன்மை” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், “அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளில் சிலருக்கு தனிப்பட்ட லாபம் இருக்கலாம். அதனால் கட்சித் தொண்டர்களுக்கு எந்தப் பலனும் இல்லை” எனக் கூறுகிறார்.
“மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பயன்படுத்தியதுபோல் தமிழ்நாட்டில் அதே ஃபார்முலாவை பாஜக பயன்படுத்தலாம். கூட்டணி ஆட்சி என்பது அதன் ஒரு பகுதி தான். அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்க வைக்கவே செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணி என்பதாக இதனை முடிவுக்குக் கொண்டு வர அமித் ஷா திட்டமிட்டதாகக் கூறும் கா.அய்யநாதன், “செய்தியாளர் சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றே பேனர் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அதிமுக – பாஜக கூட்டணி என்பதாக மாறிவிட்டது” எனக் கூறினார்.
டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images
அமித் ஷாவின் சென்னை வருகையில் தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தினகரன் அனுமதிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தை அமித் ஷா சந்திக்கவில்லை.
“அதிமுக-பாஜக கூட்டணியில் இடப் பங்கீடு என்பது இறுதி செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்கிறோம் என எடப்பாடி பழனிசாமியிடம் அமித் ஷா கூறியிருக்கலாம்” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் அய்யநாதன்.
அதிமுகவிடம் இருந்து பாஜகவுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் இருந்து இவ்விரு கட்சிகளுக்கும் பிரித்துக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே கருத்தை முன்வைத்துப் பேசும் ஜென்ராம், “பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி மறுப்பு சொல்வதற்கு வாய்ப்பில்லை. அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு மட்டுமே மறுப்பு தெரிவித்து வருகிறார்” எனக் கூறினார்.
பட மூலாதாரம், Facebook
30 தொகுதிகளில் வென்ற கூட்டணி
கடந்த காலங்களில் அதிமுக உடன் இணைந்து 30 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக செய்தியாளர் சந்திப்பின்போது அமித் ஷா கூறியிருந்தார். அப்போது என்ன நடந்தது?
1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் தலா 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அதே ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய அலை காரணமாக 30 இடங்களில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. அதே தேர்தலில் தி.மு.க-த.மா.கா கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தச் சம்பவத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை (1996, டிசம்பர் 7) திமுக அரசு கைது செய்திருந்தது. இந்த வழக்கில் 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். ஆனாலும் 1998 மக்களவைத் தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றது.
“தேர்தல் முடிவில் வாஜ்பேயி தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது. ஆனால், 13 மாதங்களில் அந்த ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். இதன் பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்பட்டன” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.
ஜெயலலிதா முன்வைத்த சில கோரிக்கைகளை வாஜ்பேயி ஏற்காதது தான் பிரதான காரணமாக சொல்லப்பட்டதாகக் கூறும் ஜென்ராம். “ஒரே ஒரு வாக்கில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது” எனக் கூறினார்.
அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. அந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை. அதன் பிறகு பாஜகவுடன் மீண்டும் கூட்டணி உடன்பாட்டை ஜெயலலிதா வைத்துக் கொள்ளவில்லை.
ஜெயலலிதா இறந்த பிறகு 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் ஐந்து இடங்களில் பாஜக போட்டியிட்டது. ஆனால், ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அங்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதிமுக, திமுக கூட்டணியில் இல்லாமலேயே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக, 2019 தேர்தலில் அந்த தொகுதியையும் இழந்தது.
பட மூலாதாரம், Getty Images
“ஆனால், இது அமித் ஷாவின் நகர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் அய்யாநாதன். “அதிமுகவுக்குள் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால், அமித் ஷா கொடுத்த அழுத்தத்தால் கூட்டணி ஆட்சிக்கே எடப்பாடி பழனிசாமி சம்மதித்துள்ளார்” என்கிறார்.
“இந்தக் கூட்டணியால் பாஜகவுக்கு முழு நன்மை” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், “அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளில் சிலருக்கு தனிப்பட்ட லாபம் இருக்கலாம். அதனால் கட்சித் தொண்டர்களுக்கு எந்தப் பலனும் இல்லை” எனக் கூறுகிறார்.
“மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பயன்படுத்தியதுபோல் தமிழ்நாட்டில் அதே ஃபார்முலாவை பாஜக பயன்படுத்தலாம். கூட்டணி ஆட்சி என்பது அதன் ஒரு பகுதி தான். அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்க வைக்கவே செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணி என்பதாக இதனை முடிவுக்குக் கொண்டு வர அமித் ஷா திட்டமிட்டதாகக் கூறும் கா.அய்யநாதன், “செய்தியாளர் சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றே பேனர் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அதிமுக – பாஜக கூட்டணி என்பதாக மாறிவிட்டது” எனக் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு