அதிமுக: செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பற்றி என்ன பேசினார்? 10 நாள் காலக்கெடு விதித்தது ஏன்?

Share

செங்கோட்டையன், அதிமுக, எடப்பாடி பழனிசாமி
படக்குறிப்பு, செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக மூத்த தலைவரும் தமிழக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்பே அறிவித்தபடி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது,

“1972-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போதே எங்கள் கிராமத்தில் அதிமுக கிளையை தொடங்கினோம். குள்ளம்பாளையம் அதிமுக கிளைச்செயலாளராக நான் பணியாற்றினேன். பின்னர் 1975-ஆம் அண்டு கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நான் அதிமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டேன். கோவையில் பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதாக என்னை எம்ஜிஆர் பாராட்டினார்.

1977-ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடுமாறு என்னை எம்ஜிஆர் கேட்டுக் கொண்ட போது, அந்த தொகுதி பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்று அவரிடம் கூறினேன். அவரோ, என் பெயரை உச்சரி அது போதும் என்று பதிலளித்தார். கட்சியுடன் முரண்பாடு கொண்டவர்களை வீட்டிற்கே சென்று சந்தித்தவர் எம்ஜிஆர். நாட்டின் நலனுக்காக கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்களை எம்ஜிஆர் அழைத்தார்.

10 ஆண்டுகள் சிறந்த ஆட்சியைத் தந்து நாடே வியக்கத்தக்க வகையில் செல்வாக்குடன் திகழ்ந்த எம்ஜிஆருக்குப் பிறகு ஆளுமையுள்ள தலைவராக இருந்து அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com