அஜர்பைஜான் விமான விபத்து: ரஷ்ய அதிபர் புதின் மன்னிப்பு கேட்டது ஏன்? அமெரிக்கா கூறியது என்ன?

Share

அஜர்பைஜான் விமான விபத்து, ரஷ்யா மன்னிப்பு

பட மூலாதாரம், Reuters

ரஷ்ய வான்வெளியில் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 38 பேர் கொல்லப்பட்டதற்கு அண்டை நாடான அஜர்பைஜான் அதிபரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரஷ்யாதான் பொறுப்பா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை.

கிறிஸ்துமஸ் தினத்தன்று விமான விபத்து குறித்த தனது முதல் கருத்தை அவர் வெளியிட்டார். ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் யுக்ரேனிய ட்ரோன் ஆபத்துகளை அகற்றுவதில் முனைப்பாக இருந்த போது இந்த “சோக சம்பவம்” நிகழ்ந்ததாக புதின் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் செச்னியாவில் தரையிறங்க முயன்ற போது ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் விமானம் சுடப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அந்த விமானத்தை காஸ்பியன் கடல் வழியே திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாயின.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கஜகஸ்தானில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 67 பேரில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com