அடிலெய்டில் நடந்த போட்டியின்போது இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சில் திணறியபோது விராட் நிலைத்து நின்று, 116 ரன்கள் அடித்தார்.
விராட் கோலியின் டெஸ்ட் கெரியரில் முக்கிய இடம் அந்த மைதானத்துக்கு உண்டு. அங்கு பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
2014ம் ஆண்டு தோனி காயம் காரணமாக விளையாடமுடியாத சூழலில், முதல் முறையாக இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக உருவெடுத்த விராட், அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 115, இரண்டாவது இன்னிங்ஸில் 141 என இரண்டு சதங்கள் விளாசி அணியை முன்நகர்த்தினார்.
அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், விராட் களத்தில் நின்றவரை மேட்சை சமன் செய்வது குறித்த சிந்தனையே இல்லை. தொடர்ச்சியாக பேட்டர்கள் விக்கெட் ஆனாலும், வெற்றி ஒன்றே இலக்கு என்ற ஆக்ரோஷத்துடன் விளையாடினார் கேப்டன் விராட்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் பயமறியாத கேப்டனாக திகழ்ந்தார் விராட் கோலி. அவர் கேப்டன்சி செய்த 68 போட்டிகளில் 40 போட்டிகளை இந்தியா வென்றுள்ளது.
வெற்றிகள் சதவிகிதத்தின் அடிப்படையில், இந்திய அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் விராட் எனக் கூறலாம்.