இன்றைய டாப் 10 செய்திகள்
1) மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த ‘மோடி பொங்கல்’ விழா ரத்து செய்யப்பட்டுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2) நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3) ஸ்மார்ட் சிட்டி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்து குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
4) எந்த விதமான கட்டமைப்பு பணிகளும் இல்லாததால் அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.
5) துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க சட்ட திருத்த மசோதா. வரும் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் என முதல்வர் அறிவிப்பு
6) 80 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தை அமைச்சர்கள் ஆய்வு. 66 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதால் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
7) மோடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. பாதுகாப்பு காரணத்திற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து மாற்றம்.
8) வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவிப்பு. தேர்வாளர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்பு.
9) குடியரசு தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு. பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம்.
10) தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல். சென்னையில் மட்டும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.