இன்றைய டாப் 10 செய்திகள்
1) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.. 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, தடுப்பூசி சான்றிதழ், கொரேனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் அறிவிப்பு
2) அவானியபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்தும்.. காளைகள், வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.
3) தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை நாளை மறுதினம் காணொலியில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
4) நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்… சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5) அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு… கொரோனா பரவலை பொறுத்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
6) சென்னையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை..
7) பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.
8) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று… வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு
9) முழு உடல் தகுதி உடன் இருப்பதாக விராட் கோலி அறிவிப்பு. மற்றவர்களின் விமர்சனங்களை பற்றி கவலையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
10) பேட்மின்டன் வீராங்கனை சாய்னாவை விமர்சித்து ட்வீட்… சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை