இன்றைய டாப்10 செய்திகள்
1) உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகள் தேர்வு. தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
2) அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
3) இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 488 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
4) மலேசிய தலைநகர் கோலாலம்பூர் முருகன் கோயிலில் தைப்பூசம் விழா கோலாகலம். பால்குடம், காவடி சுமந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
5) புதுச்சேரியில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை. கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.
6) கனிமவளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நிலுவை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு அமர்வுகளை அமைக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
7) நாடு முழுவதும் வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு.
8) பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் இந்து முன்னணி அமைப்பினர் குண்டர் சட்டத்தில் கைது. கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை.
9) பூஸ்டர் தடுப்பூசி போட நாளை மறுதினம் சிறப்பு முகாம். 600 இடங்களில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
10) தரிசனத் தடையால் முருகன் கோயில்களில் களையிழந்த தைப்பூசத் திருவிழா. பழனி, திருச்செந்தூரில் கோயில் வாசல்களில் வழிபாடு நடத்தும் பக்தர்கள்.