டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.
தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டி, டி20 வரலாற்றிலேயே அரிதாக காணப்படும் இரண்டு சூப்பர் ஓவர்களுடன் முடிவடைந்து பேசுபொருளாகி உள்ளது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குவிண்டன் டி கொக் மற்றும் மார்க்ரம் தொடக்க வீரர்களாக வந்தனர். ஆனால் மூன்றாவது ஓவரிலேயே மார்க்ரம் விக்கெட்டை இழந்தது அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ரிக்கெல்டன் அதிரடி – 188 இலக்கு
அதன்பின் களமிறங்கிய ரிக்கெல்டன் அதிரடியாக ஆடி ரன்களை வேகமாகக் குவித்தார். மறுமுனையில் டி காக் பொறுமையுடன் இன்னிங்ஸை கட்டுப்படுத்தினார். இருவரின் கூட்டணி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. எனினும் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்து வீசி தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 187 ரன்கள் எடுத்தது.

188 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தது. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை சிதறவிட்டார். விக்கெட்கள் மறுமுனையில் விழுந்தாலும், குர்பாஸ் தனிப்பட்ட முறையில் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கரைக்கு அருகில் கொண்டு சென்றார்.