தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 1/2 கப்
தேங்காய் துருவியது – 1/2 கப்
உப்பு – தே.அ
கருப்பு மற்றும் வெள்ளை எள் – 1/2 கப்
எண்ணெய் – வறுக்க தேவைக்கு ஏற்ப
நெய் – 2 ஸ்பூன்

செய்முறை :
பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரை வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்ததும் ஜல்லடையில் மாவை பொடித்துக்கொள்ளவும். இதனால் உதிரி மாவுகளை தவிர்க்கலாம்.
அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக்கொள்ளவும்.
எள்ளை மாவில் கலந்துகொள்ளவும். பின் உப்பு தேவையான அளௌ சேர்த்து கிளறிக்கொண்டே இருங்கள். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.
மாவு ஒருவேலை தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.
கிருஷ்ண ஜெயந்திக்கு பால் பாயசம் இல்லாமல் படையலா..? 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி…
சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன் தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க நெய் தொட்டுக்கொள்ளவும்.
அடுத்ததாக எண்ணெய்யை கடாயில் ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். காய்ந்ததும் உருடைகளை எண்ணெய்யில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வ்ந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். எனவே நன்கு வறுத்தெடுக்கவும்.
வறுக்கும்போது சில சமையம் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பார்த்து பதமாக செய்யவும்.
அவ்வளவுதான் உப்பு சீடை தயார்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.