யார் இந்த பதும் நிசாங்கா?
இலங்கையில் உள்ள கல்லே(Galle) என்ற இடத்தில் பிறந்த பதும் நிசாங்கா (27) எளிய பின்னணியில் இருந்து வந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.
போதிய வசதிகள் இல்லாத சமயத்தில் கடற்கரை மணலில் பயிற்சி பெற்று தனது பேட்டிங் திறமையை நிசாங்கா வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

2024-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார்.
தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தற்போது டி20 உலகக்கோப்பையிலும் சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணி தடுமாறிய போது, அந்த அணியைத் தாங்கிப் பிடித்த ஒரு தூணாக நிசாங்கா இருந்திருக்கிறார்.
எவ்வளவு அழுத்தமான சூழலிலும் பதற்றப்படாமல் ஆடுவது இவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.!