ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், “ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.
தோனி, கும்ப்ளே, கங்குலி, கபில்தேவ் ஆகிய அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள்.
எல்லோருக்கும் வித்தியாசமான குணமும் பாதையும் இருக்கும்.

பிரசன்னா அல்லது சாக்லைன் முஷ்டாக் போல நான் பந்துவீச விரும்பினால் அது சாத்தியப்படாது.
கில் தனக்கென்று ஒரு பாணி கொண்டிக்கிருக்கிறார். அவரால் கங்குலியாகவோ, தோனியாகவோ, கோலியாகவோ ஆக முடியாது.
அப்படி ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியாவை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது” என்று கூறினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 – 1 என இந்தியா பின்தங்கியிருக்கும் நிலையில், களத்தில் ஒரு கேப்டனாக சுப்மன் கில்லின் அணுகுமுறை குறித்து தங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.