பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது எமோஷனலாக இருந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை அபாரமாக விளையாடி கைப்பற்றியது. அணியின் வெற்றிக்கு, முதுகெலும்பாக செயல்பட்டார் ஷ்ரேயஸ் ஐயர்.
ஆனால் துபாயில் அணியுடன் பயிற்சியைத் தொடங்கியபோது, மனமுடைந்து அழுததாகவும் தன்மீது தானே கோபமாயிருந்ததாகவும் கூறியுள்ளார் ஷ்ரேயஸ்!

இந்தியாவின் முதல் போட்டி வங்காள தேசம் அணிக்கு எதிராக நடைபெற்றது. அந்த போட்டிக்கான நெட்ஸ் பயிற்சியில் பேட்டிங் செய்தபோது தன்னால் சரியான முறையில் பேட்டிங் ரிதத்தைக் கண்டறிய முடியவில்லை என்பதால் மனமுடைந்துள்ளார்.