சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அந்தவகையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் நியூசிலாந்து வீரர்களான ஜேக்கப் டபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாத சிறந்த வீரராக இந்தியாவின் ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.