மும்பை கிரிக்கெட் சங்கமானது (MCA), இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று ஸ்டேண்ட் திறந்துவைத்து அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.
வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் சர்மா, “இது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.
வான்கடே போன்ற ஐகானிக் மைதானத்தில் விளையாட்டின் சிறந்த வீரர்கள், உலகின் தலைசிறந்த அரசியல் தலைவர்களிடையே எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது.

இதற்காக, MCA உறுப்பினர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் விளையாடிக்கொண்டிருக்கும்போதே எனக்கு மரியாதை அளிக்கப்படுவது ஸ்பெஷலாக இருக்கிறது.
என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரின் மனைவி, என் மனைவி முன்னிலையில் இந்த கௌரவத்தைப் பெறுகிறேன்.” என்று எமோஷனலாக உரையாற்றினார்.
ரோஹித்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த மரியாதையைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.