இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வரிசையில், இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் பெயரை, வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு வைத்து அவரை கௌரவித்திருக்கிறது மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA).
வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா பெயரிலான ஸ்டேண்ட் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தன் பெற்றோர் மற்றும் மனைவி ரித்திகா முன்னிலையில் எமோஷனலாக உரையாற்றிய ரோஹித் சர்மா, “இன்று நடப்பது, கனவிலும்கூட நான் நினைக்காதது.
முடிந்தவரை நாட்டுக்காக விளையாடும்போது, நீங்கள் நிறைய சாதிக்க முயல்வீர்கள். அதனால், நிறைய மைல்கற்கள் உருவாக்கப்படுகின்றன. இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.