ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா, இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி வருகிறார்.
சமீபத்திய பேட்டியில், பெரிய தொடர்கள் குறித்த அவரது அணுகுமுறை குறித்து பேசியுள்ளார்.
தான் தனிப்பட்ட மைல் கல்களுக்காக விளையாடுவதில்லை என்றும் அணி அந்த போட்டியை, கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதாகவும் கூறியுள்ளார்.

பெரிய ஸ்கோர் அடித்தும் போட்டியை வெல்லவில்லை என்றால் அதனால் எந்த பலனும் இல்லை எனவும், 2019 உலகக் கோப்பை தோல்வியிலிருந்து இந்த பாடத்தைக் கற்றதாகவும் கூறியுள்ளார்.