RCB vs CSK: "எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது உற்சாகமாக இருந்தது" – ஆட்டநாயகன் டிம் டேவிட்

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இந்த இலக்கைத் துரத்திய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டிம் டேவிட்
டிம் டேவிட்

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிம் டேவிட், ” மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நல்ல ஸ்கோரை எட்டி, எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

எனது இயல்பான ஆட்டத்தை நான் மாற்றிக்கொள்வதில்லை. எனது பயிற்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவு எனக்கு பெரிய பலமாக இருக்கிறது.

தினேஷ் கார்த்திக் (பயிற்சியாளர்) போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவருடன் இணைந்து செயல்படுவது எனது பாக்கியம்.

டிம் டேவிட்
டிம் டேவிட்

அவரிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்று வருகிறேன். ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகளாக இருப்பதால், இப்போது தேவையற்ற அழுத்தங்களை நான் எடுத்துக் கொள்வதில்லை.

ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறேன். அதிரடி ஆட்டத்தில் ஈடுபடும்போது சில நாள்கள் சரியாக அமையாமல் போவதும் சகஜம்தான்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com