மிளகு குழம்பு ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட்!
இப்போது இந்த பதிவில் பூண்டு சட்னி செய்வது குறித்து பார்க்கலாம். இது நெய் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமில்லை இந்த சட்னியை கைப்படாமல் பக்குமாய் செய்தால் 4 நாட்களுக்கு கெட்டு போகாது. ஆனால் அதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதுமட்டுமில்லை இரவு தங்கும் எந்த சட்னியையும் குழந்தைகளுக்கு எப்போதுமே கொடுக்காதீர்கள். இந்த ரெசிபி வீடிபோ பிரபல யூடியூப் குக்கிங் சேனலான அபூர்வாஸ் நளபகம் என்ற சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, கடுகு.
செய்முறை:
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊறி அதில் காரத்திற்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு, அதே கடாயில் 1 கப் அளவு பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
3. இப்போது அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4. அடுத்தது, மிக்ஸியில் வறுத்த காய்ந்த மிளகாய், வதக்கி எடுத்த பூண்டு , தக்காளி சேர்த்து அரைக்க வேண்டும்.
5. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை அதில் கொட்ட வேண்டும்.
தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்து இருக்கீங்களா? இன்னிக்கு ட்ரை பண்ணுங்க!
6. பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் சட்னியை வதக்க வேண்டும்.
6. எண்ணெய் தனியாக பிரிந்து வந்த உடனே இறக்கினால் போதும், சுவையான அட்டகாசமான பூண்டு சட்னி தயார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.