ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அதையடுத்து, 206 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப், முதல் ஓவர் முதலே ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டும் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.